ஆதாருக்காக நான் எங்கு பதிவு செய்ய வேண்டும்?keyboard_arrow_down
ஆதாருக்கு நீங்கள் பதிவு செய்ய பதிவு முகமையால் அமைக்கப்பட்ட பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். உங்களுக்கு அருகில் பதிவு மையம் எங்கு இருக்கிறது என்பதை
“Locate Enrolment Center” அல்லது
https://appointments.uidai.gov.in/easearch.aspxஎன்ற இணைப்பில் சென்று அறியலாம். அருகிலுள்ள பதிவு மையத்தைக் கண்டறிய மாநிலம், மாவட்டம் மற்றும் ஊர்ப் பெயரை உள்ளிட வேண்டும்.
ஆதாருக்கு பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?keyboard_arrow_down
ஆதாருக்கு பதிவு செய்வதற்காக பதிவு மையத்தில் உள்ள படிவத்தை நிரப்பித் தர வேண்டும். அத்துடன் அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றையும் இணைத்துத் தர வேண்டும். 18 வகையான அடையாளச் சான்றையும், 35 வகையான முகவரிச் சான்றுகளையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக்கொள்கிறது. தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலை அறிவதற்கு
இங்கு கிளிக் செய்யவும்.
ஆதார் பதிவுக்காக மூல ஆவணங்களை நான் கொண்டு செல்ல வேண்டுமா?keyboard_arrow_down
ஆம். ஆதார் பதிவுக்காக அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றின் மூல ஆவணங்களை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். மூல ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, பதிவுக்குப் பிறகு திருப்பித் தரப்படும்.
ஆதார் பதிவுக்காக நான் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?keyboard_arrow_down
இல்லை. ஆதார் பதிவு என்பது முழுக்க முழுக்க இலவசமான சேவை ஆகும். அதற்காக பதிவு மையத்தில் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
ஆதார் பதிவின் போது எந்தெந்த வகையான தகவல்கள் பதிவு செய்யப்படும்?keyboard_arrow_down
ஆதார் பதிவின்போது இரு வகையான தகவல்கள் பதிவு செய்யப்படும். அவை டிமோகிராபிக்( பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி) மற்றும் உடற்கூறு தகவல்கள் (10 விரல்ரேகை பதிவுகள், இரு கருவிழிப்படலங்கள் மற்றும் புகைப்படம்) ஆகும். செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமல்ல. விருப்பமிருந்தால் மட்டும் அவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதாருக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளதா?keyboard_arrow_down
இல்லை. ஆதாருக்காக உங்களின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால் ஆதார் பதிவு மையத்திற்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும்.
ஆதார் பதிவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அஞ்சலில் அனுப்புவதன் மூலம் நான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாமா?keyboard_arrow_down
இல்லை. ஆதாருக்காக உங்களின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால் ஆதார் பதிவு மையத்திற்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும்.
ஒப்புகைச் சீட்டு/பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட டிமோகிராபிக் தகவல்கள் என்னிடம் உள்ள ஆவணங்களுடன் ஒத்துப் போகவில்லை என்றால் நான் என்ன செய்வது?keyboard_arrow_down
பதிவு ஆவணத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை நீங்கள் பதிவு செய்த நேரத்திலிருந்து 96 மணி நேரத்தில் திருத்திக் கொள்ளலாம். இந்த 96 மணி நேரம் என்பது ஒப்புகைச் சீட்டு/பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு நேரத்திலிருந்து தொடங்கும்.
96 மணி நேரத்திற்கு பிறகு தகவல்களை திருத்திக் கொள்வது எப்படி?keyboard_arrow_down
96 மணி நேரத்திற்குள் உங்களின் தகவல்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால், உங்களின் ஆதார் உருவாக்கப்பட்ட பிறகு, அதில் உள்ள தகவல்களை திருத்திக் கொள்ளலாம்.
எனது கை விரல் ரேகைகள் அல்லது கருவிழிப் படலம் இல்லாமல் இருந்தாலும் நான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாமா?keyboard_arrow_down
உங்களுடைய சில அல்லது அனைத்து விரல் ரேகைகளும்/கருவிழிப் படலமும் இல்லாமல் இருந்தாலும் ஆதாருக்கு பதிவு செய்ய முடியும். இத்தகைய சூழல்களை பதிவு செய்வதற்கான வசதிகள் ஆதார் மென்பொருளில் உள்ளன.
ஆதார் பதிவுக்கு செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டியது கட்டாயமா?keyboard_arrow_down
ஆதார் பதிவுக்கு செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டியது கட்டாயமல்ல. ஆனால், உங்களின் ஆதார் விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
ஆதாருக்கு பதிவு செய்ய வயது வரம்பு ஏதேனும் உண்டா?keyboard_arrow_down
இல்லை. ஆதாருக்கு பதிவு செய்து கொள்ள எந்த வயது வரம்பும் இல்லை. புதிதாக பிறந்த குழந்தை கூட ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதாருக்கு பதிவு செய்து கொண்ட பிறகு எனது ஆதார் உருவாக்கப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?keyboard_arrow_down
ஆதாருக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து அது உருவாக்கப்படுவதற்கு 90 நாட்கள் ஆகும்.
எனது ஆதார் உருவாக்கப்பட்டு விட்டதா என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?keyboard_arrow_down
உங்களின் ஆதார் உருவாக்கப்பட்ட பின்னர் அதுகுறித்த தகவல் பதிவு செய்யப்பட்ட உங்கள் செல்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும். அதுமட்டுமின்றி,
“Check Aadhaar Status” அல்லது
https://resident.uidai.gov.in/check-aadhaar.என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆதார் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எனது ஆதார் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் கடிதத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியுமா?keyboard_arrow_down
ஆம், உங்களின் ஆதார் உருவாக்கப்பட்டவுடன் என்ற முகவரியில் உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று அதிலுள்ள ஆதார் பதிவு பகுதியில் உள்ள ‘டவுன்லோட் ஆதார்’ பட்டனை கிளிக் செய்து மின்னணு ஆதாரை பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னணு ஆதாரும் மூல ஆதாரைப் போலவே செல்லுபடியாகுமா?keyboard_arrow_down
ஆம். மூல ஆதாருக்கு உள்ள அதே மதிப்பு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னணு ஆதாருக்கும் உண்டு.
ஆதாருக்காக பதிவு செய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு/ ஆதார் கடிதம் தொலைத்து விட்டது. அதைக்கண்டு பிடிக்க ஏதேனும் வழிகள் உண்டா?keyboard_arrow_down
உண்டு.
உங்களின் செல்பேசி எண் ஆதாரில் பதிவு செய்யப்பட்டிருந்தால், என்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்தில் ஆதார் பதிவு பகுதியில் உள்ள “
தவறவிட்ட ஆதார் அடையாள பதிவு எண்ணை திரும்பப்பெற ” என்ற தலைமையிலான இணைப்பை கிளிக் செய்து ஆதார் பதிவு எண் அல்லது ஆதாரைக் கண்டு பிடிக்கலாம். திரும்பப்பெற வேண்டிய ஆதார் பதிவு எண் அல்லது ஆதாரை தேர்வு செய்து அதன்பின்னர் உங்கள் பெயரையும், ஆதாரில் பதிவு செய்துள்ள செல்பேசி எண்ணையும் உள்ளிட்டால் உங்களின் ஆதார் பதிவு எண்/ ஆதார் உங்களின் செல்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
ஒருவேளை உங்களின் செல்பேசி எண் ஆதாரில் பதிவு செய்யப்படவில்லை என்றால் அருகிலுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.
ஆதாருக்காக நான் பலமுறை பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஆதார் கடிதம் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் நான் என்ன செய்வது?keyboard_arrow_down
உங்களின் ஆதார் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், அஞ்சலில் உங்களுக்கு வந்து சேராமல் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் நீங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று“
Check Aadhaar Status” or
https://resident.uidai.gov.in/check-aadhaarஎன்ற இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பதிவு செய்த அனைத்து ஆதார் பதிவு எண்களின் நிலை என்ன? என்பதை சரிபார்க்க வேண்டும் அல்லது அருகிலுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.
எனது ஆதார் நிராகரிக்கப்பட்டு விட்டதாக எனது செல்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?keyboard_arrow_down
ஆதார் உருவாக்கம் என்பது பல்வேறு தர ஆய்வுகளை உள்ளடக்கியதாகும். அதனால் தரம் அல்லது பிற தொழில்நுட்பக் காரணங்களால் உங்கள் ஆதார் நிராகரிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, உங்களின் ஆதார் நிராகரிக்கப்பட்டு விட்டதால செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தால் நீங்கள் மீண்டும் ஆதாருக்காக பதிவு செய்து கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
ஆதார் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் என்னிடம் இல்லை. ஆனாலும், நான் பதிவு செய்யலாமா?keyboard_arrow_down
ஆம், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குடும்ப அட்டையில் அவரது பெயர் இருந்தால், அதைக் கொண்டு ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாம். இத்தகைய சூழலில் குடும்பத் தலைவர் முதலில் செல்லுபடியாகக் கூடிய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றைக் காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவரது ஆதார்/ ஆதார் பதிவு எண்ணைக் கொண்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மொத்தம் 8 வகையான உறவுமுறை ஆவணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக்கொள்கிறது. தேசிய அளவில் செல்லுபடியாகக் கூடிய ஆவணங்களின் பட்டியலைப் பார்க்க
இங்கு கிளிக் செய்யவும்.
ஒரு வசிப்பாளர் அவரது ஆதார் பதிவு நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும்?keyboard_arrow_down
பதிவு செய்யப்படு போது வசிப்பாளரின் முன் உள்ள திரையில் அவரது பெயர் மற்றும் விவரங்கள் ஆங்கிலத்திலும், உள்ளூர் மொழியிலும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், பெயருக்கு முன்பாக திரு./ திருமதி./ கர்னல்./ டாக்டர். போன்ற முன்விகுதிகளோ, பின் விகுதிகளோ இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இனிசியல்களை தருவதற்கு பதிலாக முழுப்பெயரையும் வழங்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணமாக பி.கே. ஷர்மா என்பதை பிரிஜ் குமார் ஷர்மா என்று எழுதுவது நல்லது. ஆபரேட்டரால் எடுக்கப்பட்ட உங்களின் புகைப்படம் சரியாகவும், அடையாளம் காணும் வகையிலும் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
வசிப்பாளர்களுக்கு தனியாக அடையாளச் சான்று/ முகவரிச் சான்று இல்லாத நிலையில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணி அட்டை ஆகியவை செல்லத்தக்க அடையாள/முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுமா?keyboard_arrow_down
ஆம், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களில் குடும்பத் தலைவரின் புகைப்படம் இருந்து, அதில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் அடையாளம் மற்றும் முகவரியை அவர் சரிபார்த்து உறுதி செய்யும்பட்சத்தில் அந்த ஆவணங்கள் அடையாள/ முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப் படும். குடும்பத்தலைவர் சரிபார்த்து உறுதி செய்த ஆவணங்களை பதிவாளரால் நியமிக்கப்பட்ட சரிபார்ப்பவர் பார்த்து உறுதி செய்து கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப பதிவுகளின் போது பின்பற்றுவதற்காக வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் ஏதேனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் உள்ளதா?keyboard_arrow_down
ஆம். குடும்பத் தலைவர் அவரது மூல அடையாளச்சான்றுகள்/ முகவரிச் சான்றுகளை கொண்டு வர வேண்டும். அந்தக் குடும்பத்திற்கான ரேஷன் அட்டையில் யாருடைய பெயர்களும், விவரங்களும் உள்ளனவோ அவர்களை மட்டும் தான் தான் ஆதாருக்கு பதிவு செய்ய முடியும். குடும்பப் பதிவுகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் முடிந்தவரை ஒன்றாக வர வேண்டும். அனைவரும் ஒரே நாளில் வர முடியாவிட்டால், வர முடியாதவர் இன்னொரு நாள் பதிவுக்காக வரும் போது அவருடன் குடும்பத் தலைவரும் வர வேண்டியது கட்டாயமாகும்.
முகவரிச்சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அஞ்சல் மூலம் கடிதம் வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்றால் என்ன செய்வது? வசிப்பாளர் தரும் கூடுதல் விவரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?-keyboard_arrow_down
ஆம். முகவரிச் சான்றில் வீட்டு எண், சந்து எண், தெரு பெயர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும், எழுத்துப் பிழைகளை சரி செய்யவும், பி ன்கோடு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும் வசிப்பாளர் அனுமதிக்கப்படுவார். முகவரிச் சான்றில் உள்ள முகவரியின் அடிப்படையை மாற்றிவிடாத வகையிலான அனைத்துத் திருத்தங்களும் அனுமதிக்கப்படும். வசிப்பாளர் கோரும் திருத்தம் பெரியதாகவும், அடிப்படை முகவரியை மாற்றக் கூடியதாகவும் இருந்தால், அதை பதிவு செய்வதற்காக மாற்று முகவரிச் சான்றை வழங்கியோ அல்லது அறிமுகம் செய்பவர் மூலமோ தான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கும்.
வசிப்பாளருக்கு இப்போது வசிக்கும் இடத்திலும், சொந்த ஊரிலுமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில், அவற்றில் எதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக் கொள்ளும், எந்த முகவரிக்கு ஆதார் கடிதத்தை அனுப்பி வைக்கும்?keyboard_arrow_down
ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றில் எந்த முகவரியில் ஆதார் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி வசிப்பாளரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொள்ளும். வசிப்பாளரின் விருப்பப்படி, அவரிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் அவரது விவரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிவு செய்யும்.