ஆதார் என்பது என்ன?keyboard_arrow_down
இந்தியாவின் பல மொழிகளில் அடித்தளம் என்ற பொருள் கொண்ட ஆதார், இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். இது வசிப்பாளர்களின் உடற்கூறுகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அரசுத் திட்டங்களின் பயன்கள் முறைகேடான வழிகளில் சுரண்டப்படுவதற்கு காரணமான போலி மற்றும் புனையப்பட்ட அடையாளங்களை அடையாளம் கண்டுபிடித்து விடும் என்பதால் எந்த வசிப்பாளரும் போலி அடையாள எண்ணை வைத்திருக்க முடியாது. ஆதார் மூலமான அடையாளக் கண்டுபிடிப்பின் மூலம் போலிகள் நீக்கப்படுவதால் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு பிற தகுதியுடைய வசிப்பாளர்களுக்கு பயன்களை விரிவுபடுத்த அரசால் முடியும்.
ஆதாரின் அம்சங்கள் மற்றும் பயன்கள் என்ன?keyboard_arrow_down
ஒற்றை ஆதார்: ஆதார் தனித்துவமான எண் ஆகும். இது வசிப்பாளர்களின் உடற்கூறுகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அரசுத் திட்டங்களின் பயன்கள் முறைகேடான வழிகளில் சுரண்டப்படுவதற்கு காரணமான போலி மற்றும் புனையப்பட்ட அடையாளங்களை அடையாளம் கண்டுபிடித்து விடும் என்பதால் எந்த வசிப்பாளரும் போலி அடையாள எண்ணை வைத்திருக்க முடியாது. ஆதார் வழி அடையாளக் கண்டுபிடிப்பின் மூலம் போலிகள் நீக்கப்படுவதால் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு பிற தகுதியுடைய வசிப்பாளர்களுக்கு பயன்களை விரிவுபடுத்த அரசால் முடியும்.
எங்கும் பயன்படுத்தும் தன்மை: ஆதார் என்பது எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக் கூடிய எண் ஆகும். அதனால் சேவை வழங்கும் முகமைகள் பயனாளியின் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்காக இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் மத்திய தனித்துவ அடையாள தகவல் தொகுப்பை தொடர்பு கொள்ளலாம்.
எந்த அடையாள ஆவணமும் இல்லாதவர்களையும் சேர்க்கலாம்: ஏழைகளுக்கும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் பயன்கள் கிடைப்பதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், அரசின் சலுகைகளை பெறுவதற்கான அடையாளச் சான்றுகள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது தான். ஆதார் வழங்குவதில் ஒருவரைப் பற்றிய விவரங்களை சரிபார்க்க அறிமுகம் செய்து வைப்பவர் என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், அடையாளச் சான்று இல்லாதவர்களும் தங்களின் அடையாளத்தை நிரூபிக்க ஆதார் உதவுகிறது.
மின்னணு பயன்மாற்றங்கள்: ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலமாக வசிப்பாளர்களுக்கான பயன்களை, குறைந்த செலவில், மிகவும் பாதுகாப்பான முறையில் நேரடியாக அவர்களுக்கே அனுப்ப முடியும். இதனால் இப்போது பயன் வழங்குவதற்கு ஆகும் அதிக செலவை குறைக்க முடியும். அதுமட்டுமின்றி, இப்போதைய முறையில் உள்ள முறைகேடுகளும் தடுக்கப்படும்.
பயனாளிகளுக்கு பயன் சென்றடைந்ததை உறுதி செய்ய ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறை: வசிப்பாளர்களின் அடையாளத்தை சரிபார்க்க விரும்பும் முகமைகளுக்கு சரிபார்ப்பு சேவைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது. அரசின் சலுகைகள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய இது உதவுகிறது. மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை மூலம் சேவைகளும் மேம்படுத்தப்படுகின்றன. தெளிவான பொறுப்புடைமையும், வெளிப்படைத்தன்மை கொண்ட கண்காணிப்பும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளின் தரத்தையும், அதை பெறும் முறையையும் குறிப்பிடத்தக்கவகையில் மேம்படுத்தும்.
வசிப்பாளர்களுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் வழங்கும் சுயசேவை முறை: ஆதாரை சரிபார்க்கும் அமைப்பாக பயன்படுத்தி, வசிப்பாளர்கள் தங்களுக்குரிய சலுகைகளை அறிந்து கொள்ள முடியும். தங்களிடமுள்ள செல்பேசிகள், சேவை மையங்கள் மற்றும் பிற வழிகளில் தங்களுக்கான தேவைகளைக் கேட்டுப் பெறவும், தங்களின் குறைகளை களைந்து கொள்ளவும் முடியும். வசிப்பாளர்கள் தங்களிடமுள்ள செல்பேசி மூலமாகவே சுய சேவை பெறும்போது இருவழி சரிப்பார்ப்பு (வசிப்பாளரின் பதிவு செய்யப்பட்ட செல்பேசி அவரிடம் இருப்பதை உறுதி செய்வது, அதன்வழியாக ஆதார் கடவுச் சொல்லை அனுப்பி உறுதி செய்வது) மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த நடைமுறைகள் செல்பேசி வழி வங்கிச் சேவை மற்றும் பணம் வழங்கலுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவை ஆகும்.
ஆதார் எண் பெறுவது கட்டாயமா?keyboard_arrow_down
யார் வேண்டுமானாலும் ஆதாருக்கு விருப்பப்படி விண்ணப்பிக்கலாம். அதேபோல் பயன்கள் மற்றும் சேவைகளை வழங்கும் அமைப்புகள் தங்களது சேவை வழங்கல் கட்டமைப்பில் ஆதாரை பயன்படுத்தும் வசதியை தேர்வு செய்யலாம். அத்தகைய சூழலில், தங்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள பயனாளிகள் மற்ரும் வாடிக்கையாளர்கள் அவர்களின் ஆதாரைக் கோருவார்கள்.
ஆதார் பெறுவதற்காக தனிநபர்கள் என்னென்ன தகவல்களை வழங்க வேண்டும்?keyboard_arrow_down
தேவைப்படும் டெமோகிராபிக் விவரங்கள்:
பெயர்
பிறந்த தேதி-
பாலினம்
முகவரி
பெற்றோர்/காப்பாளர் விவரங்கள் (குழந்தைகளுக்கு தேவைப்படும், பெரியவர்களும் வழங்கலாம்)
தொடர்பு விவரங்கள் செல்பேசி மற்றும் மின்னஞ்சல்
தேவைப்படும் உடற்கூறு விவரங்கள்:
புகைப்படம்
10 விரல் ரேகைகள்
கருவிழிப் பதிவு
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்பட வேண்டிய தகவல் விவரங்களை வரையறுப்பதற்காகவும், அதற்காக கடைபிடிக்க வேண்டிய சரிபார்ப்பு நடைமுறைகளை உருவாக்கவும் திரு.என்.விட்டல் அவர்கள் தலைமையில் டிமோகிராபிக் தகவல்கள் தரம் மற்றும் சரிபார்ப்பு நடைமுரைகள் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அதன் அறிக்கையை 09.12.2009 அன்று தாக்கல் செய்தது. அதன் முழு அறிக்கையும் documents/UID_DDSVP_Committee_Report_v1.0.pdf.என்ற இணைய முகவரியில் உள்ளது. அதுமட்டுமின்றி பதிவு செய்யப்பட வேண்டிய உடற்கூறு தகவல்களின் தரம் மற்றும் இயல்புகளை வரையறுப்பதற்காக தேசிய தகவல் மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் பி.கே கொய்ராலா தலைமையில் உடற்கூறு தரங்கள் குழுவையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அமைத்தது. இக்குழுவின் அறிக்கை 07.01.2010 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை /documents/Biometrics_Standards_Committee_report.pdf.என்ற இணையதள முகவரியில் உள்ளது.
ஒருவரின் பிறந்த தேதி எவ்வாறு சரிபார்க்கப்படும்?keyboard_arrow_down
விட்டல் குழு பரிந்துரைப்படி, ஆதார் தகவல் தளத்தில் ஒருவரின் பிறந்த தேதி சரிபார்த்து உறுதி செய்யப்பட்டதா? அல்லது உத்தேசமானதா? என்பதைக் காட்டுவதற்காக ஒரு கொடி பறந்து கொண்டிருக்கும். ஒரு வசிப்பாளருக்கு அவரது துல்லியமான பிறந்த தேதி தெரியவில்லை என்றால், வயதை மட்டும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார். வயதை குறிப்பிட்டால் பிறந்த ஆண்டை கணக்கிடுவதற்கான வசதி பதிவு மென்பொருளில் உள்ளது.
அறிமுகம் செய்து வைப்பவர்களை ஒரு கட்டத்தில் நீக்கவோ/ சேர்க்கவோ பதிவாளரால் முடியுமா?keyboard_arrow_down
ஆம், பதிவின் பிந்தைய கட்டத்தில் அறிமுகம் செய்து வைப்பவர்களை சேர்க்கவோ, நீக்கவோ, மாற்றம் செய்யவோ பதிவாளரால் முடியும். அறிமுகம் செய்து வைப்பவரின் செயல்பாடுகளையும் பிந்தைய கட்டத்தில் மாற்ற முடியும். அறிமுகம் செய்து வைப்பவர்களின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து, தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ளும்படி பதிவாளர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஊக்குவிக்கிறது.
தனிநபர் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எவ்வாறு பாதுகாக்கும்?keyboard_arrow_down
தனிநபர்களைப் காப்பதும், அவர்களின் தகவல்களை பாதுகாப்பதும் தான் தனித்துவ அடையாளத் திட்டத்தின் உள்ளார்ந்த வடிவமைப்பு ஆகும். ஒருவரின் அடையாளத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்காத, எளிதில் யூகிக்கமுடியாத எண்ணை ஆதாராக வழங்குவதில் தொடங்கி, கீழே தரப்பட்டுள்ள மற்ற அம்சங்கள் வரை வசிப்பாளரின் நலன்களைப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகவும், பயனாகவும் தனித்துவ அடையாள திட்டம் கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் பெறுதல்: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆதார் வழங்குவதற்காகவும், வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்வதற்காகவும் மட்டுமானதாகும். அடையாளத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே சில அடிப்படைத் தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேகரிக்கிறது. இவற்றில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவை அடங்கும். பெற்றோர்/காப்பாளர் பெயர் குழந்தைகளுக்கு மட்டும் அவசியமாகும்; மற்றவர்களுக்கு தேவையில்லை. செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை விரும்பினால் மட்டும் பதிவு செய்து கொள்ளலாம். அடையாளத்தின் தனித்துவத்தை உறுதி செய்வதற்காக உடற்கூறு தகவல்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேகரிக்கிறது. இந்த வகையில் புகைப்படம், விரல் ரேகை, கருவிழிப் படலப் பதிவு ஆகியவை சேகரிக்கப்படுகின்றன.
சேகரிக்கப்பட்ட தகவல்கள் தொகுக்கப்படுவதோ, கண்காணிக்கப்படுவதோ இல்லை: மதம், ஜாதி, சமுதாயம், வகுப்பு, இனம், வருமானம், உடல்நிலை போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கொள்கை அனுமதிப்பதில்லை. எனவே, தனித்துவ அடையாள அமைப்பின் மூலமாக தனிநபர்களின் தகவல்களை தொகுப்பது சாத்தியமல்ல. உண்மையில் எந்தெந்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது அதில் பிறந்த இடம் என்ற அம்சமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், பிறந்த இடத்தை அடிப்படையாக வைத்து தனிநபர்களின் தகவல்கள் தொகுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக குடிமக்கள் சமுதாய அமைப்புகள் கூறியதால் பிறந்த இடம் என்ற அம்சத்தை தனித்துவ அடையாள ஆணையம் கைவிட்டு விட்டது. தனிநபர்களின் பரிமாற்றம் குறித்த எந்த தகவலையும் தனித்துவ அடையாள ஆணையம் சேகரிப்பதில்லை. தங்களின் அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்யும் தனிநபர்கள் குறித்த ஆவணங்களில் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்ற தகவல் மட்டுமே இருக்கும். வசிப்பாளர் சார்ந்த சிக்கல்கள் ஏதேனும் எழுந்தால் அதை சரி செய்வதற்காக அவர்களைப் பற்றிய குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டும் சில காலத்திற்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆம் அல்லது இல்லை என்ற வடிவில் தான் பதில் கிடைக்கும்: ஆதார் தகவல் தொகுப்பில் உள்ள தனிநபர் விவரங்களை வெளியிட இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக ஒருவரின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கான வேண்டுகோள்கள் வந்தால் அதற்கு ஆம் அல்லது இல்லை என்ற அடிப்படையில் தான் பதில் வரும்.நீதிமன்ற ஆணை அல்லது தேசியப் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் அரசுத்துறை இணைச் செயலாளரின் ஆணை வந்தால் மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது நியாயமான விதி விலக்கு தான். இது தெளிவாகவும், துல்லியமாகவும் உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போது சில குறிப்பிட்ட தகவல்களை அணுகுவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றித் தான் இந்த அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் பாதுகாப்பு மற்றும் தனிமையுரிமை: சேகரிக்கப்படும் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய கடமை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உள்ளது. வசிப்பாளர்களின் தகவல்கள் அனைத்தும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் மென்பொருளில் சேகரிக்கப்படும். அந்த தகவல்களை அனுப்பும் போது அவை வெளியில் கசியாமல் தடுக்க என்கிரிப்ட் செய்யப்படும். பயிற்சி பெற்ற, சான்றளிக்கப்பட்ட பணியாளர்கள் தான் தகவல்களை சேகரிப்பார்கள். அதேநேரத்தில் அவர்கள் தகவல்களை அணுக முடியாது. தகவல்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய விரிவான பாதுகாப்புக் கொள்கையை தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. தகவல் பாதுகாப்புத் திட்டம், மத்திய தகவல் தொகுப்புக்கான கொள்கைகள், தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கான முறைகள் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவை தவிர மிகவும் கடுமையான பாதுகாப்பு மற்றும் சேமிப்பு விதிகளும் நடைமுறையில் உள்ளன. அடையாள விவரங்களை வெளியில் சொல்லுவதற்கான அபராதம் உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு விதிமீறலுக்குமான தண்டனை மிகவும் கடுமையானதாகும். மத்திய தகவல் தொகுப்பை ஹேக் செய்வது உட்பட அனுமதி இல்லாமல் அணுகுவதற்கும் தண்டனை வழங்கப்படும். மத்திய தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களை சிதைப்பதற்கும் தண்டனை உண்டு.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவல்களை மற்ற தகவல் தொகுப்புகளுடன் இணைத்தல் மற்றும் சேர்த்தல்: தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு வேறு எந்த தகவல் தொகுப்புடனோ அல்லது வேறு தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களுடனோ இணைக்கப் படவில்லை. இதன் நோக்கம் என்பது ஏதேனும் ஒரு சேவை வழங்கும் போது அதன் பயனாளியின் அடையாளத்தை அவரது ஒப்புதலுடன் சரி பார்ப்பது மட்டும் தான். தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு மின்னணு முறையிலும், இயல் முறையிலும் உயர்ந்த நிலையில் உள்ள சிலரால் பாதுகாக்கப்படுகிறது. தனித்துவ அடையாள ஆணையத்தின் பணியாளர்களால் கூட இந்த தகவல்களை பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பான முறையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பான தகவல் பெட்டகத்தில் சேகரித்து வைக்கப்படும். தகவல்களை அணுகியது குறித்த அனைத்து விவரங்களும் முறையாக பதிவு செய்யப்படும்.
குடியிருப்பாளர் தனது ஆதார் எண்ணை தொலைத்து விட்டால் என்ன செய்வது?keyboard_arrow_down
1. ஆதார் சேவையைப் பயன்படுத்தி குடியிருப்பாளர் தனது ஆதார் எண்ணைக் கண்டறியலாம் - இழந்த UID/EID ஐ மீட்டெடுக்கவும்
2. குடியிருப்பாளர் 1947ஐ அழைக்கலாம், அங்கு எங்கள் தொடர்பு மைய முகவர் அவருடைய/அவளுடைய EID எண்ணைப் பெற அவருக்கு உதவுவார்.
3. ரெசிடெண்ட் போர்ட்டல் இலிருந்து தனது eAadhaar ஐப் பதிவிறக்குவதற்கு குடியிருப்பாளர் இந்த EID ஐப் பயன்படுத்தலாம்- eAadhaar.
4. 1947 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் IVRS அமைப்பில் உள்ள EID எண்ணிலிருந்து குடியிருப்பாளர் தனது ஆதார் எண்ணைப் பெறலாம்.
ஒரு குடியிருப்பாளர் ஆதார் கடிதம் பெறவில்லை என்றால் என்ன செய்வது?keyboard_arrow_down
குடியிருப்பாளர்கள் ஆதார் கடிதத்தைப் பெறவில்லை என்றால், அவர்கள் UIDAI தொடர்பு மையத்தைத் தங்கள் பதிவு எண்ணுடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது ஆதார் நிலையை ஆன்லைனில் https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus இல் பார்க்கலாம். இதற்கிடையில், குடியிருப்பாளர்கள் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். மாற்றாக, பெயரளவிலான கட்டணமாக ரூ. 50/- செலுத்தி ஆதார் PVC கார்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். ஆதார் பிவிசி கார்டு, இந்திய அஞ்சல் சேவையின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலம் ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட குடியிருப்பாளர் முகவரிக்கு வழங்கப்படுகிறது.
எனது ஆதாரை சமீபத்தில் புதுப்பித்தேன். ஆனால் அது கையேடு சரிபார்ப்பின் கீழ் காட்டப்படுகிறது. அது எப்போது புதுப்பிக்கப்படும்?keyboard_arrow_down
ஆதார் புதுப்பிப்பு 90 நாட்கள் வரை ஆகும். உங்கள் புதுப்பிப்புக் கோரிக்கையானது 90 நாட்களுக்கு மேல் செயல்முறையில் இருந்தால், 1947ஐ (கட்டணமில்லா எண்) டயல் செய்யவும் அல்லது கூடுதல் உதவிக்கு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. க்கு எழுதவும்.
நான் முன்பு ஆதாருக்கு விண்ணப்பித்தேன் ஆனால் அது கிடைக்கவில்லை. அதனால், மீண்டும் விண்ணப்பித்துள்ளேன். எனது ஆதார் எப்போது கிடைக்கும்?keyboard_arrow_down
முதல் பதிவிலிருந்து உங்கள் ஆதார் உருவாக்கப்பட்டிருந்தால், மீண்டும் பதிவு செய்வதற்கான ஒவ்வொரு முயற்சியும் நிராகரிக்கப்படும். மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். உங்கள் ஆதாரை நீங்கள் கீழ்கண்ட வழியில் மீட்டெடுக்கலாம்:
1. நிரந்தர பதிவு மையத்திற்குச் செல்லலாம்
2. 1947 ஐ அழைக்கலாம்
நான் சமீபத்தில் எனது ஆதாரை புதுப்பித்தேன். தயவுசெய்து அதை விரைவுபடுத்த முடியுமா? எனக்கு அது அவசரமாக வேண்டும்.keyboard_arrow_down
ஆதார் புதுப்பிப்பு ஒரு நிலையான செயல்முறையைக் கொண்டுள்ளது, இது கோரப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்கள் வரை ஆகும். மேம்படுத்தல் செயல்முறையை மாற்ற முடியாது. தயவுசெய்து காத்திருக்கவும். https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus என்ற இணையதளத்தில் நிலையைப் பார்க்கலாம்.
ஆதார் PVC கார்டு என்றால் என்ன? இது காகித அடிப்படையிலான லேமினேட் செய்யப்பட்ட ஆதார் கடிதத்திற்கு சமமானதா?keyboard_arrow_down
"ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு" என்பது UIDAI ஆல் தொடங்கப்பட்ட ஒரு புதிய சேவையாகும், இது ஆதார் வைத்திருப்பவர்கள் பெயரளவிலான கட்டணங்களைச் செலுத்தி PVC கார்டில் தங்கள் ஆதார் விவரங்களை அச்சிடுவதற்கு உதவுகிறது. ஆதார் PVC அட்டை காகித அடிப்படையிலான ஆதார் கடிதத்திற்கு சமம்.
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி?keyboard_arrow_down
பின்வரும் செயல்முறையின் மூலம் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம்:
அ) வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலைத் திறக்கவும் - https://incometaxindiaefiling.gov.in/
ஆ) அதில் பதிவு செய்யவும் (ஏற்கனவே செய்யவில்லை என்றால்). உங்கள் PAN (நிரந்தர கணக்கு எண்) உங்கள் பயனர் ஐடியாக இருக்கும்.
இ) பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உள்நுழையவும்.
ஈ) ஒரு பாப் அப் விண்டோ தோன்றும், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி கேட்கும். இல்லையெனில், மெனு பாரில் உள்ள ‘சுயவிவர அமைப்புகள்’ என்பதற்குச் சென்று, ‘லிங்க் ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
உ) PAN விவரங்களின்படி பெயர் பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஊ) உங்கள் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பான் விவரங்களை திரையில் சரிபார்க்கவும். பொருத்தமின்மை இருந்தால், ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சரி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
எ) விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, "லிங்க் நவ்" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
ஏ) உங்கள் ஆதார் உங்கள் பான் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பாப்-அப் செய்தி உங்களுக்குத் தெரிவிக்கும்.
ஐ) உங்கள் PAN மற்றும் ஆதாரை இணைக்க நீங்கள் https://www.utiitsl.com/ அல்லது https://www.egov-nsdl.co.in/ ஐப் பார்வையிடலாம்.
வசிப்பாளரின் தனிமையுரிமையை பாதுகாக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது?keyboard_arrow_down
தனிநபர்களைப் காப்பதும், அவர்களின் தகவல்களை பாதுகாப்பதும் தான் தனித்துவ அடையாளத் திட்டத்தின் உள்ளார்ந்த வடிவமைப்பு ஆகும். ஒருவரின் அடையாளத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்காத, எளிதில் யூகிக்கமுடியாத எண்ணை ஆதாராக வழங்குவதில் தொடங்கி, கீழே தரப்பட்டுள்ள மற்ற அம்சங்கள் வரை வசிப்பாளரின் நலன்களைப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகவும், பயனாகவும் தனித்துவ அடையாள திட்டம் கொண்டிருக்கிறது.
- குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் பெறுதல்:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி பெற்றோர்/காப்பாளர் பெயர் (குழந்தைகளுக்கு மட்டும் அவசியமாகும்; மற்றவர்களுக்கு தேவையில்லை) புகைப்படம், விரல் ரேகை, கருவிழிப் படலப் பதிவு ஆகியஅடிப்படைத் தகவல்களை மட்டுமே சேகரிக்கிறது. - சேகரிக்கப்பட்ட தகவல்கள் தொகுக்கப்படுவதோ, கண்காணிக்கப்படுவதோ இல்லை:
மதம், ஜாதி, சமுதாயம், வகுப்பு, இனம், வருமானம், உடல்நிலை போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கொள்கை அனுமதிப்பதில்லை. எனவே, தனித்துவ அடையாள அமைப்பின் மூலமாக தனிநபர்களின் தகவல்களை தொகுப்பது சாத்தியமல்ல. - ஆம் அல்லது இல்லை என்ற வடிவில் தான் பதில் கிடைக்கும்:
ஆதார் தகவல் தொகுப்பில் உள்ள தனிநபர் விவரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவிக்காது. மாறாக ஒருவரின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கான வேண்டுகோள்கள் வந்தால் அதற்கு ஆம் அல்லது இல்லை என்ற அடிப்படையில் தான் பதில் வரும். - இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவல்களை மற்ற தகவல் தொகுப்புகளுடன் இணைத்தல் மற்றும் சேர்த்தல்:
தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு வேறு எந்த தகவல் தொகுப்புடனோ அல்லது வேறு தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களுடனோ இணைக்கப் படவில்லை. இதன் நோக்கம் என்பது ஏதேனும் ஒரு சேவை வழங்கும் போது அதன் பயனாளியின் அடையாளத்தை அவரது ஒப்புதலுடன் சரி பார்ப்பது மட்டும் தான். தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு மின்னணு முறையிலும், இயல் முறையிலும் உயர்ந்த நிலையில் உள்ள சிலரால் பாதுகாக்கப்படுகிறது. தனித்துவ அடையாள ஆணையத்தின் பணியாளர்களால் கூட இந்த தகவல்களை பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பான முறையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பான தகவல் பெட்டகத்தில் சேகரித்து வைக்கப்படும். தகவல்களை அணுகியது குறித்த அனைத்து விவரங்களும் முறையாக பதிவு செய்யப்படும்.
இந்தியத் தனித்துவ அடையாள ஆணம் மேற்கொண்டுள்ள தகவல் பாதுகாப்பு மற்றும் தனிமையுரிமை நடவடிக்கைகள் என்ன?keyboard_arrow_down
சேகரிக்கப்படும் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய கடமை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உள்ளது. வசிப்பாளர்களின் தகவல்கள் அனைத்தும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் மென்பொருளில் சேகரிக்கப்படும். அந்த தகவல்களை அனுப்பும் போது அவை வெளியில் கசியாமல் தடுக்க என்கிரிப்ட் செய்யப்படும். தகவல்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய விரிவான பாதுகாப்புக் கொள்கையை தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டி விதிமுறைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது. இது அதன் இணையதளத்தில் உள்ளது.
அடையாள விவரங்களை வெளியில் சொல்லுவதற்கான அபராதம் உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு விதிமீறலுக்குமான தண்டனை மிகவும் கடுமையானதாகும். மத்திய தகவல் தொகுப்பை ஹேக் செய்வது உட்பட அனுமதி இல்லாமல் அணுகுவதற்கும் தண்டனை வழங்கப்படும். மத்திய தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களை சிதைப்பதற்கும் தண்டனை உண்டு.
What are அனுமதியில்லாமல் தகவல்களைப் பார்ப்பது அல்லது தகவல் சார்ந்த மோசடிகளுக்கான குற்றவியல் தண்டனைகள் என்னென்ன?keyboard_arrow_down
ஆதார் மசோதாவில் இடம்பெற்றுள்ள தகவல் சார்ந்த மோசடிகளுக்கான தண்டனைகள் விவரம் வருமாறு:
- ஆள் மாறாட்டம் செய்வதன் மூலம் பொய்யான டிமோகிராபிக் அல்லது உடற்கூறு தகவல்களை வழங்குவது குற்றம் ஆகும் - இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.
- ஆதார் எண் வைத்துள்ள ஒருவரின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை மாற்றியோ அல்லது மாற்ற முயன்றோ அவரின் அடையாளத்தை எடுத்துக் கொள்வது குற்றம் ஆகும் -இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.
- வசிப்பாளரின் தகவல்களை சேகரிக்க நியமிக்கப்பட்ட நிறுவனம் போன்று நடிப்பது குற்றம் ஆகும் - இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், தனி நபர்களுக்கு ரூ.10,000 அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
- பதிவின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களை அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு தெரிந்தே அனுப்புவது குற்றமாகும்-இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், தனி நபர்களுக்கு ரூ.10,000 அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
- மத்திய அடையாள தகவல் தொகுப்புக்குள் சட்டவிரோதமாக நுழைவதும், ஹேக் செய்வதும் குற்றமாகும் - இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
- மத்திய அடையாள தகவல் தொகுப்பை சிதைப்பது குற்றமாகும்- இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.
- ஒரு வசிப்பாளர் அவருடையது அல்லாத உடற்கூறு விவரங்களை வழங்குவது குற்றமாகும்- இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.
ஆதாரை எதற்காவெல்லாம் பயன்படுத்தலாம்? ஆதார் மூலமான பயன்பாடுகள் என்னென்ன? ஆதார் மூலமான பயன்பாடுகள் மூலம் வசிப்பாளர் எவ்வாறு பயனடைவார்?keyboard_arrow_down
இந்தியாவின் பல மொழிகளில் அடித்தளம் என்ற பொருள் கொண்ட ஆதார், இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய அமைப்புமற்றும்/அல்லது ஓர் அமைப்பால் வழங்கப்படும் சேவைகள்/பயன்களைப் பெற வசிப்பாளருக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தருவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம். கீழ்க்கண்ட திட்டங்களை வழங்குவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம்.
- உணவு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள்- பொதுவினியோகத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, மதிய உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்.
- வேலைவாய்ப்பு- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சுவர்ண ஜெயந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், இந்தியா வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
- கல்வி - அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி பெறும் உரிமை
- சமூக உள்ளடக்கம் &சமூகப் பாதுகாப்பு - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஆதி பழங்குடி குழுக்கள் மேம்பாடு, இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம்
- சுகாதாரச் சேவை: தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஜனஸ்ரீ காப்பீட்டுத் திட்டம், ஆம்ஆத்மி காப்பீட்டுத் திட்டம்
- சொத்துப் பரிமாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை போன்ற பிற பயன்பாடுகள்.
அரசால் வழங்கப்படும் பிற அடையாள ஆவணங்களில் இருந்து ஆதார் எந்த வகையில் வேறுபட்டது?keyboard_arrow_down
ஆதார் என்பது வசிப்பாளருக்கு வழங்கப்பட்ட, வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடிய, இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும், எந்த நேரமும் ஆன்லைனில் சரிபார்க்கக்கூடிய12 இலக்க எண் ஆகும். ஆதார் சரிபார்ப்புக்கான விடை ஆம்/இல்லை என்று தான் வரும். ஆதார் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்பது கழிவுகள் மற்றும் கசிவுகளை தடுத்தல், போலி மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்குதல், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் சமூகப் பாதுகாப்பு பயன்கள் மற்றும் மானியம் வழங்கலின் தரத்தை அதிகரிப்பது ஆகும்.
வருமானவரிக் கணக்குகளை தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியிருக்கிறதா?keyboard_arrow_down
ஆம்,1961-ஆம் ஆண்டின் வருமானரிச் சட்டத்தில் 2017ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின்படி அறிமுகம் செய்யப்பட்ட 139 ஏஏ பிரிவின்படி 2017 ஜூலை ஒன்றாம் தேதி முதல் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும்போதும், நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்கும் போதும் ஆதார் எண்/ ஆதார் விண்ணப்ப பதிவு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
எனக்கு ஏற்கனவே நிரந்தரக் கணக்கு எண் உள்ளது. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது அதை நான் குறிப்பிடுகிறேன். அதற்கு மேலும் ஆதார் எண்ணை நான் குறிப்பிட வேண்டுமா?keyboard_arrow_down
ஆம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத நிரந்தரக் கணக்கு எண்கள் 2017-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திற்குப் பிறகு செல்லாததாகி விடும்.
நிரந்தர கணக்கு எண்ணிலும், ஆதாரிலும் எனது பெயர் வித்தியாசமாக உள்ளது. இதனால் இரண்டையும் இணைக்க முடியவில்லை. நான் என்ன செய்வது?keyboard_arrow_down
நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றால் பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட டிமோகிராபிக் தகவல்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
ஒருவேளை ஆதார் விவரங்களுடன் ஒப்பிடும்போது வரி செலுத்துபவரால் வழங்கப்பட்ட ஆதார் பெயரில் சிறு மாற்றம் இருந்தால் ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள செல்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி இணைக்கலாம். அதேநேரத்தில் ஆதார், நிரந்தர கணக்கு எண் ஆகிய இரண்டிலும், பாலினம், பிறந்த தேதி ஆகியவை ஒன்றாக இருப்பதை வரி செலுத்துபவர் உறுதி செய்ய வேண்டும்.
மிகவும் அரிதாக நிரந்தர கணக்கு எண்ணில் இருப்பதை விட ஆதாரில் பெயர் முற்றிலுமாக மாறுபட்டிருந்தால் இணைப்பு முயற்சி தோல்வியடைந்து விடும். வரி செலுத்துபவர் ஆதார் அல்லது நிரந்தர கணக்கு எண்ணில் பெயரை மாற்றம் செய்து தான் இணைக்க வேண்டும்.
குறிப்பு: நிரந்தர கணக்கு எண் விவரங்களில் திருத்தம் செய்வது குறித்த விசாரணைகளுக்கு செல்க:: https://www.utiitsl.com.
ஆதார் விவரங்களில் திருத்தம் செய்வது குறித்த விசாரணைகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளம் www.uidai.gov.in.-க்கு செல்லவும்.
இதற்கு பிறகும் இணைப்பதில் சிக்கல் நீடித்தால் வருமானவரித்துறையின்அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் அல்லது அத்துறையின் அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
ஆதார் மற்றும் நிரந்தரக் கணக்கு எண்ணில் எனது பிறந்த தேதி ஒன்றாக இல்லை. அதனால் இரண்டையும் இணைக்க முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள்.keyboard_arrow_down
நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டுமானால் உங்கள் பிறந்த தேதியை ஆதாரிலோ அல்லது நிரந்தர கணக்கு எண்ணிலோ திருத்த வேண்டும். அதற்கு பிறகும் சிக்கல் நீடித்தால் வருமானவரித்துறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
என்னிடம் எனது பிறந்த தேதிக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆதாரையும், நிரந்தர கணக்கு எண்ணையும் இணைக்க வசதியாக அவற்றில் ஒன்றில் எனது பிறந்த தேதியை நான் எப்படி திருத்துவது?keyboard_arrow_down
ஆதாரைப் பொறுத்தவரை பிறந்த தேதிக்கு ஆதாரச் சான்றை வழங்கினால் அது சரிபார்க்கப்பட்ட பிறந்த தேதியாக கருதப்படும். ஆதாரச் சான்று இல்லாமல் வசிப்பாளரால் தெரிவிக்கப்பட்ட பிறந்த தேதி அறிவிக்கப்பட்ட ஒன்றாக கருதப்படும்.
எனது நிரந்தரக் கணக்கு எண்ணை நான் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் அது செயலிழந்து விடுமா?keyboard_arrow_down
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாரை வழங்கி, அதை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளையும் மட்டும் தான் வழங்குகிறது. இவை தவிர வேறு தயாரிப்பு அல்லது திட்டம் குறித்த விசாரணைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களை அணுகவும். நிரந்தர கணக்கு எண் தொடர்பான விசாரணைகளுக்கு வருமானவரித்துறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவில் நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்க ஆதாருக்கு பதிவு செய்ய வேண்டியது கட்டாயமா? ஆம் என்றால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் என்ன?keyboard_arrow_down
1961-ஆம் ஆண்டின் வருமானரிச் சட்டத்தில் 2017ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின்படி அறிமுகம் செய்யப்பட்ட 139 ஏஏ பிரிவின்படி 2017 ஜூலை ஒன்றாம் தேதி முதல் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும்போதும், நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்கும் போதும் ஆதார் எண்/ ஆதார் விண்ணப்ப பதிவு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
எனினும் ஆதார் எண்/ ஆதார் விண்ணப்ப பதிவு எண்ணை குறிப்பிடுவது ஆதார் பெற தகுதியுடையவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.
2016 ஆதார் (இலக்கு வைக்கப்பட்ட நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவை வழங்கல்) சட்டப்படி இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் மட்டும் தான் ஆதார் பெற முடியும். மேற்கண்ட சட்டப்படி, ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்தவர் தான் வசிப்பாளர் ஆவார்.
நான் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். ஆனால், எனக்கு இன்னும் ஆதார் எண் வரவில்லை. ஆனாலும் நான் எனது வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாமா?keyboard_arrow_down
செய்யலாம். ஆதாருக்கு பதிவு செய்யும் போது பதிவு மையத்தில் வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டில் இடம்பெற்றுள்ள பதிவு எண்ணை, வருமான வரிக்கணக்கு தாக்கலின் போது குறிப்பிட்டால் போதுமானது.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதார் பெற முடியுமா?keyboard_arrow_down
2016 ஆதார் (இலக்கு வைக்கப்பட்ட நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவை வழங்கல்) சட்டப்படி ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்த வசிப்பாளர் மட்டுமே ஆதார் பெற முடியும்.
ஆதாரை நிரந்தர கணக்கு எண்ணுடன் எப்படி இணைப்பது?keyboard_arrow_down
வரி செலுத்துபவர்கள் தங்களின் நிரந்தர கனக்கு எண்ணையும், ஆதாரையும் இணைப்பதற்காக முதலில் வருமானவரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பின்னர் கீழ்க்கண்டவற்றை செய்ய வேண்டும்.
- பயனர் அடையாளம், கடவுச்சொல், பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்தி வருமானவரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் உள்நுழையவும்.
- அவ்வாறு உள்நுழைந்தவுடன் உங்கள் நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான பெட்டி திறக்கும்.
- வருமானவரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் பதிவு செய்யும் போது வசிப்பாளர் தாக்கல் செய்த பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அங்கு ஏற்கனவே இருக்கும்.
- திரையில் காணப்படும் விவரங்கள் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ளவிவரங்களுடன்ஒத்துப்போகின்றனவா?என்பதை சரிபார்க்கவும்
- அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் உங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து இணைப்பதற்கான பட்டனை கிளிக் செய்யவும்.
- அதன்பின்னர் உங்கள் ஆதார் வெற்றிகரமாக நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி தோன்றும்.
நான் ஒரு வெளிநாடுவாழ் இந்தியர். ஆனால், எனக்கு ஆதார் இல்லை. ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆதாரை வழங்காவிட்டால் எனது நிரந்தர கணக்கு எண் முடக்கப்பட்டு விடும் என்பது உண்மையா?keyboard_arrow_down
1961-ஆம் ஆண்டின் வருமானரிச் சட்டத்தில் 2017ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின்படி அறிமுகம் செய்யப்பட்ட 139 ஏஏ பிரிவின்படி 2017 ஜூலை ஒன்றாம் தேதி முதல் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும்போதும், நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்கும் போதும் ஆதார் எண்/ ஆதார் விண்ணப்ப பதிவு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் இது ஆதார் பெற தகுதியுடையவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. 2016 ஆதார் (இலக்கு வைக்கப்பட்ட நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவை வழங்கல்) சட்டப்படி இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் மட்டும் தான் ஆதார் பெற முடியும்.மேற்கண்ட சட்டப்படி, வசிப்பாளர் எனப்படுபவர் ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்தவராக இருக்க வேண்டும். அதன்படி வருமானவரிச் சட்ட்த்தின் 139 ஏஏ பிரிவின்படி ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பது 2016-ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின்படி இந்திய வசிப்பாளராக இல்லாதவருக்கு பொருந்தாது.
அதுமட்டுமின்றி, 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொருந்தாது.
தனிநபர் மற்றும் அவரைப் பற்றிய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது?keyboard_arrow_down
தனிநபர்களைப் காப்பதும், அவர்களின் தகவல்களை பாதுகாப்பதும் தான் தனித்துவ அடையாளத் திட்டத்தின் உள்ளார்ந்த வடிவமைப்பு ஆகும். ஒருவரின் அடையாளத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்காத, எளிதில் யூகிக்கமுடியாத எண்ணை ஆதாராக வழங்குவதில் தொடங்கி, கீழே தரப்பட்டுள்ள மற்ற அம்சங்கள் வரை வசிப்பாளரின் நலன்களைப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகவும், பயனாகவும் தனித்துவ அடையாள திட்டம் கொண்டிருக்கிறது.
- குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் பெறுதல்:
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆதார் வழங்குவதற்காகவும், வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்வதற்காகவும் மட்டுமானதாகும். அடையாளத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே சில அடிப்படைத் தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேகரிக்கிறது. இவற்றில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவை அடங்கும். பெற்றோர்/காப்பாளர் பெயர் குழந்தைகளுக்கு மட்டும் அவசியமாகும்; மற்றவர்களுக்கு தேவையில்லை. செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை விரும்பினால் மட்டும் பதிவு செய்து கொள்ளலாம். அடையாளத்தின் தனித்துவத்தை உறுதி செய்வதற்காக உடற்கூறு தகவல்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேகரிக்கிறது. இந்த வகையில் புகைப்படம், விரல் ரேகை, கருவிழிப் படலப் பதிவு ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. - சேகரிக்கப்பட்ட தகவல்கள் தொகுக்கப்படுவதோ, கண்காணிக்கப்படுவதோ இல்லை:
மதம், ஜாதி, சமுதாயம், வகுப்பு, இனம், வருமானம், உடல்நிலை போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கொள்கை அனுமதிப்பதில்லை. எனவே, தனித்துவ அடையாள அமைப்பின் மூலமாக தனிநபர்களின் தகவல்களை தொகுப்பது சாத்தியமல்ல. உண்மையில் எந்தெந்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது அதில் பிறந்த இடம் என்ற அம்சமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், பிறந்த இடத்தை அடிப்படையாக வைத்து தனிநபர்களின் தகவல்கள் தொகுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக குடிமக்கள் சமுதாய அமைப்புகள் கூறியதால் பிறந்த இடம் என்ற அம்சத்தை தனித்துவ அடையாள ஆணையம் கைவிட்டு விட்டது. தனிநபர்களின் பரிமாற்றம் குறித்த எந்த தகவலையும் தனித்துவ அடையாள ஆணையம் சேகரிப்பதில்லை. தங்களின் அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்யும் தனிநபர்கள் குறித்த ஆவணங்களில் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்ற தகவல் மட்டுமே இருக்கும். வசிப்பாளர் சார்ந்த சிக்கல்கள் ஏதேனும் எழுந்தால் அதை சரி செய்வதற்காக அவர்களைப் பற்றிய குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டும் சில காலத்திற்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும். - ஆம் அல்லது இல்லை என்ற வடிவில் தான் பதில் கிடைக்கும்: ஆதார் தகவல் தொகுப்பில் உள்ள தனிநபர் விவரங்களை வெளியிட இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக ஒருவரின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கான வேண்டுகோள்கள் வந்தால் அதற்கு ஆம் அல்லது இல்லை என்ற அடிப்படையில் தான் பதில் வரும்.நீதிமன்ற ஆணை அல்லது தேசியப் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் அரசுத்துறை இணைச் செயலாளரின் ஆணை வந்தால் மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது நியாயமான விதி விலக்கு தான். இது தெளிவாகவும், துல்லியமாகவும் உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போது சில குறிப்பிட்ட தகவல்களை அணுகுவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றித் தான் இந்த அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
- தகவல் பாதுகாப்பு மற்றும் தனிமையுரிமை: சேகரிக்கப்படும் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய கடமை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உள்ளது. வசிப்பாளர்களின் தகவல்கள் அனைத்தும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் மென்பொருளில் சேகரிக்கப்படும். அந்த தகவல்களை அனுப்பும் போது அவை வெளியில் கசியாமல் தடுக்க என்கிரிப்ட் செய்யப்படும். பயிற்சி பெற்ற, சான்றளிக்கப்பட்ட பணியாளர்கள் தான் தகவல்களை சேகரிப்பார்கள். அதேநேரத்தில் அவர்கள் தகவல்களை அணுக முடியாது.
தகவல்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய விரிவான பாதுகாப்புக் கொள்கையை தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. தகவல் பாதுகாப்புத் திட்டம், மத்திய தகவல் தொகுப்புக்கான கொள்கைகள், தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கான முறைகள் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவை தவிர மிகவும் கடுமையான பாதுகாப்பு மற்றும் சேமிப்பு விதிகளும் நடைமுறையில் உள்ளன. அடையாள விவரங்களை வெளியில் சொல்லுவதற்கான அபராதம் உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு விதிமீறலுக்குமான தண்டனை மிகவும் கடுமையானதாகும். மத்திய தகவல் தொகுப்பை ஹேக் செய்வது உட்பட அனுமதி இல்லாமல் அணுகுவதற்கும் தண்டனை வழங்கப்படும். மத்திய தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களை சிதைப்பதற்கும் தண்டனை உண்டு. - இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவல்களை மற்ற தகவல் தொகுப்புகளுடன் இணைத்தல் மற்றும் சேர்த்தல்: தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு வேறு எந்த தகவல் தொகுப்புடனோ அல்லது வேறு தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களுடனோ இணைக்கப் படவில்லை. இதன் நோக்கம் என்பது ஏதேனும் ஒரு சேவை வழங்கும் போது அதன் பயனாளியின் அடையாளத்தை அவரது ஒப்புதலுடன் சரி பார்ப்பது மட்டும் தான். தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு மின்னணு முறையிலும், இயல் முறையிலும் உயர்ந்த நிலையில் உள்ள சிலரால் பாதுகாக்கப்படுகிறது. தனித்துவ அடையாள ஆணையத்தின் பணியாளர்களால் கூட இந்த தகவல்களை பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பான முறையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பான தகவல் பெட்டகத்தில் சேகரித்து வைக்கப்படும். தகவல்களை அணுகியது குறித்த அனைத்து விவரங்களும் முறையாக பதிவு செய்யப்படும்.
தனித்துவ அடையாள தகவல் தொகுப்பை யார் அணுகுவார்? தகவல் தொகுப்பின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும்?keyboard_arrow_down
- ஆதார் எண் வைத்துள்ள வசிப்பாளர்கள் தனித்துவ அடையாள தகவல் தொகுப்பில் சேமிக்கப்பட்டுள்ள தங்களின் சொந்த தகவல்களை மட்டும் பார்க்க அனுமதி பெற்றவர்கள் ஆவர்.
- தகவல் தொகுப்பை அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அணுகுவதற்கு வசதியாக மத்திய அடையாள தகவல் தொகுப்பு செயல்பாடுகள் அனைத்தும் கடுமையான விதிமுறைகளை பின்பற்றியே நடைபெறும்.
- ஹேக்கிங் மற்றும் பிற சைபர் தாக்குதல்களில் இருந்து தகவல் தொகுப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.
வசிப்பாளர்களின் குறைகள் எவ்வாறு களையப்படுகின்றன?keyboard_arrow_down
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஒற்றை தொடர்பாக விளங்கவும், அனைத்து விசாரணைகள் மற்றும் குறைகளைக் கேட்டு தீர்த்து வைக்கவும் வசதியாக தகவல் மையம் ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அமைத்துள்ளது. பதிவு தொடங்கிய நாளில் இருந்து தொடர்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
- வசிப்பாளர்கள், பதிவாளர்கள், பதிவு முகமைகள் ஆகியோரே இந்த அமைப்பின் பயனர்கள் ஆவர்.
- ஆதாருக்காக பதிவு செய்யும் எந்த வசிப்பாளருக்கும் அச்சிடப்பட்ட ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் பதிவு எண் இருக்கும். தொடர்பு மையத்துடன் தொடர்பு கொள்வதற்கான எந்த வழியிலும் தொடர்பு கொண்டு ஆதார் உருவாக்கம் எந்த நிலையில் உள்ளது என்பதை வசிப்பாளர் அறிய இந்த பதிவு எண் உதவுகிறது.
- ஆதார் பதிவில் ஈடுபடும் ஒவ்வொரு பதிவு முகமைக்கும் ஒரு தனித்துவமான என் வழங்கப்படும். தொழில்நுட்ப உதவி மையத்தை உள்ளடக்கிய தொடர்பு மையத்தை விரைவாகவும், அதன் குறிப்பிட்ட பிரிவையும் அணுகுவதற்கு இந்த தனித்துவ எண் வழங்கப்படும்.
வசிப்பாளர் நினைத்தால் ஆதாரிலிருந்து வெளியேற முடியுமா?keyboard_arrow_down
ஆதாரில் சேராமல் இருப்பதற்கான வாய்ப்பு மட்டும் தான் வசிப்பாளருக்கு உள்ளது. ஆதார் சேவை வழங்கும் கருவியே தவிர வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் அது வடிவமைக்கப்படவில்லை. ஆதார் என்பது அனைவருக்கும் தனித்துவமான ஒன்று என்பதால் அது மாற்றத்தக்கதல்ல. ஆதார் என்பது நேரடியாக ஆஜராகுதல், ஆன்லைன் முறையில் சரிபார்த்தல் ஆகிய இரு அம்சங்களைக் கொண்டது என்பதால் ஒரு வசிப்பாளர் ஆதாரை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அது பயன்பாடின்றி அப்படியே கிடக்கும். எனினும், இப்போதைய நிலையில் ஆதார் தகவல் தொகுப்பிலிருந்து வெளியேறுவதற்கான வசதி இல்லை. இதுதொடர்பாக மீண்டும் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு வசிப்பாளரைத் தவிர அவரது ஆதாரை வேறு எவராலும் பயன்படுத்த முடியாது.
ஆதார் தகவல் தொகுப்பிலிருந்து வசிப்பாளரின் தகவல்களை அகற்ற முடியுமா?keyboard_arrow_down
அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் பிற சேவைகளைப் போன்று, இதில் வசிப்பாளர் ஒருவர் ஆதார் பெற்ற பிறகு அவரது தகவல்களை அகற்ற முடியாது. ஆதாரில் வசிப்பாளரின் தனித்துவ அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதால், ஒவ்வொரு முறை புதிய வசிப்பாளரின் விவரங்கள் பதிவு செய்யப்படும் போதும், அந்த விவரங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பதை அறிய அந்த தகவல் தேவைப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு தான் வசிப்பாளருக்கு ஆதார் வழங்கப்படும்
மொபைல் ஆதார் செயலி ஒருமுறை கடவுச்சொல்லை தானாகவே புரிந்துகொள்ளாது.keyboard_arrow_down
மொபைல் ஆதார் செயலியை நிறுவும்போது அனைத்து அனுமதிகளையும் (குறுஞ்செய்திகளைப் படிக்கும் வாய்ப்பை அனுமதிக்கவும்) சரிபார்க்கவும்.
அல்லது
- அ. செல்பேசியின் செட்டிங்ஸுக்கு செல்லவும்
- ஆ. அனுமதி கட்டுப்பாடு பகுதிக்குச் செல்லவும்
- இ. செயலிக்கு செல்லவும்
- ஈ. மொபைல் ஆதார் செயலிக்குச் செல்லவும்
- உ. குறுஞ்செய்திகளை படிக்கும் வாய்ப்பை அனுமதிக்கவும்
மொபைல் ஆதார் செயலியில் வசிப்பாளர்கள் தங்கள் விவரங்களை எவ்வாறு உருவாக்கலாம்?keyboard_arrow_down
- அ. 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும் அல்லது உங்கள் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யவும்.
- ஆ. உங்கள் செல்பேசி இணைப்பு செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், அந்த எண்தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் உங்களின் பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்யவும்.
- இ. கட்டாய தகவல்களை உள்ளீடு செய்தபின், திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள சரிபார்ப்புப் பொத்தானை அழுத்தவும். அவ்வாறு அழுத்தியபின் திரையிலிருந்து வெளியில் செல்லக்கூடாது.
- ஈ. நீங்கள் வழங்கிய தகவல்கள் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் செல்பேசிக்கு வரும். அந்தக் கடவுச்சொல்லை செயலி செல்பேசியிலிருந்து தானாகவே படித்துப் புரிந்துகொள்ளும்.
வசிப்பாளர்கள் தங்கள் விவரங்களை எவ்வாறு பார்க்கலாம்?keyboard_arrow_down
கீழ்க்கண்ட நடைமுறைகளின் மூலம் வசிப்பாளர்கள் அவர்களின் விவரங்களை பார்க்கலாம்.
- அ. செயலியின் முகப்பு பக்கத்தில் உள்ள உங்களின் விவரத்தை அழுத்தவும்.
- ஆ. அதற்கான கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும்.
- இ. உங்கள் முகவரியைப் பார்க்க விவரத் திரையில் உங்கள் விவரத்தை புரட்டவும்.
மொபைல் ஆதாரில் உங்களின் மேம்படுத்தப்பட்ட விவரங்களை எவ்வாறு பார்க்கலாம்?keyboard_arrow_down
- அ. உங்கள் விவரப் பகுதியை திறக்கவும்.
- ஆ. அண்மையில் மேம்படுத்தப்பட்ட ஆதார் விவரங்களைப் பார்க்க திரையின் மேல் பகுதி வலது ஓரத்தில் உள்ள "View updated Profile-ஐ தேர்வு செய்யவும்.
- இ. அதை தட்டியவுடன் ஒருமுறை கடவுச்சொல் பெறப்பட்டு, தானாக நிரப்பப்படும். அதை உறுதி செய்து விவரங்களைப் பார்க்க ஓகே பொத்தானை தட்டவும்.
- ஈ. விவரங்களை ஒத்திசைவு செய்யும் நடைமுறையை தொடங்கும்முன் உங்கள் செல்பேசியில் இணைய இணைப்பு இருப்பதை உறுதி செய்யவும்.
- உ. வெற்றிகரமாக ஒத்திசைவு செய்தபின் சமீபத்திய ஆதார் விவரங்கள் உங்கள் திரையில் தெரியும்.
கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி?keyboard_arrow_down
- அ. முகப்புத் திரையில் உள்ள டாப் மெனுவில் இருந்து கடவுச்சொல்லை மாற்றுக என்பதை தேர்வு செய்யவும்.
- ஆ. அதில் கேட்கப்படும் அனைத்து கட்டாய விவரங்களையும் பதிவு செய்த பின் திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள கடவுச்சொல்லை மாற்றுக என்ற பொத்தானை அழுத்தவும்.
- இ. அதன் பின் புதிய கடவுச்சொல்லை உள்ளிடவும்.
மொபைல் ஆதார் செயலியிலிருந்து வசிப்பாளர்கள் அவர்களின் விவரங்களை எவ்வாறு நீக்கலாம்?keyboard_arrow_down
வசிப்பாளர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகள் மூலம் உங்கள் விவரங்களை நீக்க முடியும்.
- அ. உங்கள் விவரப்பகுதியை திறந்து வலது மேல் பகுதியில் உள்ள மெனுவை கிளிக் செய்யவும்.
- ஆ. விவரங்களை நீக்குவதற்கான வாய்ப்பை தேர்வு செய்யவும்.
- இ. உங்கள் விவர கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உங்களை சரிபார்த்துக்கொள்வதற்கு முன்பாக உங்கள் செல்பேசியில் இணையதள இணைப்பு இருப்பதை உறுதி செய்யவும்.
- ஈ. உங்கள் விவரங்களை செயலி நீக்கிவிடும்.
செயலியை திறக்கும்போது மீண்டும் மீண்டும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்வதை தவிர்ப்பது எப்படி?keyboard_arrow_down
- அ. செயலியின் இடதுபக்க மேல் ஓரத்தில் உள்ள பட்டியலை தேர்வு செய்யவும்.
- ஆ. செட்டிங்ஸுக்கு செல்லவும்
- இ. ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கேள் என்ற விவரம் அடங்கிய பெட்டியில் அன் செக் செய்யவும்.
கடவுச் சொல்லை உருவாக்குவதற்கு ஏதேனும் குறிப்பிட்ட வடிவங்கள் உள்ளனவா?keyboard_arrow_down
செயலியை திறந்ததுமே முதல் நடவடிக்கையாக கடவுச்சொல்லை கேட்கும். பயனாளர்கள் குறைந்தபட்சம் 8 எழுத்து முதல் அதிகபட்சம் 12 எழுத்து கொண்ட கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். கடவுச் சொல்லில் குறைந்தது ஒரு எண், ஒரு எழுத்து, ஒரு சிறப்பு குறியீடு ( @,#,&,%,*,!,-,(,) ). மற்றும் ஒரு பெரிய எழுத்து இருக்க வேண்டும். உதாரணம் Sharma@123.
மொபைல் ஆதார் செயலி ஆஃப்லைனில் இயங்குமா?keyboard_arrow_down
மொபைல் ஆதார் இணையதளத்துடன் இணைக்கப்படவேண்டியது அவசியமாகும். அப்போதுதான் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திலிருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்யமுடியும். எனவே, உங்கள் செல்பேசியில் இணைய இணைப்பு எப்போது இருப்பதை உறுதி செய்யுங்கள்.
பதிவு செய்யப்படாத செல்பேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை எங்கு உள்ளீடு செய்வது?keyboard_arrow_down
மொபைல் ஆதாரில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை நாமாக உள்ளீடு செய்ய முடியாது. இது ஒரு பாதுகாப்பு சார்ந்த அம்சமாகும். உங்கள் செயலி குறுஞ்செய்திக்காக காத்திருந்தால் அதிலிருந்து விலகிச்செல்லக் கூடாது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை, மொபைல் ஆதார் தானாகவே படித்து புரிந்துகொள்ளும்.
மின்னணு கேஒய்சி என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன?keyboard_arrow_down
மின்னணு அறிவீர் உங்கள் வாடிக்கையாளரை அல்லது மின்னணு கேஒய்சி என்பது வங்கிகள் போன்ற நிறுவனங்கள் வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான வழிமுறையாகும். வசிப்பாளர்கள் இதை தங்களின் முகவரிச் சான்றாக மின்னணு முறையில் தாக்கல் செய்ய ஆதார் அனுமதிக்கிறது. இது ஆதார் அட்டையின் நகலுக்கு இணையாக செல்லுபடியாகக்கூடியதாகும்.
மின்னணு கே.ஒய்.சி.யை எவ்வாறு பகிர்வது?keyboard_arrow_down
- அ. உங்கள் விவரங்களை திறக்கவும்.
- ஆ. வலதுபுற மேல் ஓரத்தில் கிளிக் செய்யவும்.
- இ. மின்னணு கேஒய்சியை பகிரவும் என்பதை தேர்வு செய்யவும் / அழுத்தவும். அதன்பின் பாப்அப் விரியும். அதில் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளீடு செய்யவும்.
- ஈ. அதன்பின் இருக்கும் பகிரும் வாய்ப்புகளில் (ஜிமெயில், புளூடூத், ஷேர்இட், ஸ்கைப் பல...) ஒன்றை தேர்வு செய்யவும்.
காலம் சார்ந்த ஒருமுறை கடவுச்சொல் என்பது என்ன? அதை ஆதார் எண் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?keyboard_arrow_down
காலம் சார்ந்த ஒருமுறை கடவுச் சொல் என்பது தானாக உருவாக்கப்படும் தற்காலிக கடவுச் சொல்லாகும். குறுஞ்செய்தி அடிப்படையிலான ஒருமுறைப் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.
உடற்கூறு தகவல்களை பூட்டுதல் / திறத்தல் என்பது என்ன?keyboard_arrow_down
வசிப்பாளரின் உடற்கூறு விவரங்களை பூட்டுவது என்பது பாதுகாப்பான உடற்கூறு பதிவு சரிபார்ப்பின் ஓர் அம்சமாகும். இந்த முறையில் ஆதார் எண் வைத்திருப்பவர் தமது உடற்கூறு பதிவுகளை தற்காலிகமாக திறக்கும் வரையிலோ அல்லது பூட்டும் வசதியை செயலிழக்கச் செய்யும் வரையிலோ உடற்கூறு பதிவுகள் பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
வசிப்பாளர்கள் தங்களின் உடற்கூறு பதிவுகளை எவ்வாறு பூட்ட முடியும்?keyboard_arrow_down
- அ. உங்கள் விவரங்களை திறக்கவும்.
- ஆ. வலதுபுற மேல் ஓரத்தில் கிளிக் செய்யவும்.
- இ. உடற்கூறு செட்டிங்குகளை தேர்வு செய்யவும்.
- ஈ-. உடற்கூறு பதிவுகளை லாக் செய்ய ‘Enable Biometric Lock’ என்ற பாக்ஸை தேர்வு செய்யவும்.
- உ. உங்களது தேர்வை சேமிக்க வலது மேல் ஓரத்தில் உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யவும்.
- ஊ. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் உருவாகி தானாகவே நிரப்பிக்கொள்ளும். அதன் பின் உடற்கூறு பதிவுகள் பூட்டப்படும்.
- எ. உடற்கூறு பதிவுகளை திறக்கும் வரை அது நிரந்தரமாக பூட்டப்பட்டிருக்கும்.